ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

11 நவ., 2012

மீண்டும் மாற்றம்...........

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, நவம்பர் 11, 2012 No comments

 கடலூர்,திண்டுக்கல்  மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட நான்கு காவல்துறை உயர் அதிகாரிகள் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதன்படி சென்னை மயிலாப்ப
ூர் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் மீண்டும் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யான ஏ.ராதிகா, கடலூர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட எஸ்.பி.யான டி.கே.புகழேந்தி, சென்னை மாதவரம் துணை ஆணையராகவும், மாதவரம் துணை ஆணையர் எஸ். லட்சுமி, மயிலாப்பூர் துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கடந்த வாரம் இட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யபட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

http://www.portonovonews.blogspot.in/2012/11/blog-post_8218.html

10 நவ., 2012

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடுகள்,மத்திய அரசு அறிவிப்பு

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, நவம்பர் 10, 2012 No comments


போலியான ஆவணங்களைக் கொடுத்து செல்போன் சேவை நிறுவனங்களிடமிருந்து சிம் கார்டு வாங்கி, இணைப்புகளைப் பெறுவது அதிகரித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதன்படி, மத்திய தொலைதொடர்புத்துறை செல்போன் சேவை இணைப்புகளைப் பெறுவதற்கு புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது. அந்த வழிமுறைகள் வருமாறு:- 

* முன்கூட்டியே பணம் கொடுத்து பயன்படுத்தும் ப்ரி பெய்ட் மற்றும் சேவைக்கு பின்னர் பணம் செலுத்துகிற போஸ்ட் பெய்ட் செல்போன் இணைப்புகளை பெறுவதற்கு வாடிக்கையாளர் தவறான தகவல்களை கொடுத்தால் அதற்கு செல்போன் சேவை நிறுவனங்களே பொறுப்பு. 

 செல்போன் சிம் கார்டுகளை விற்பனை செய்கிற சில்லறை விற்பனையாளர், விண்ணப்பதாரரையும், அவரது விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டுள்ள உருவப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து, நான் விண்ணப்பதாரரை நேரில் பார்த்தேன், விண்ணப்பத்துடன் ஒட்டப்பட்டுள்ள உருவப்படத்தை ஒத்துப் பார்த்தேன் என்று சான்றளிக்க வேண்டும். 

 போலியான ஆவணங்கள் தந்து யாரேனும் செல்போன் சேவை இணைப்பை பெற்று விட்டனர் என செல்போன் சிம்கார்டு விற்பனையாளர் அறிய வந்தால், இது தொடர்பாக செல்போன் சேவை நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, 15 நாளில் போலீசில் புகார் செய்து வழக்கு தொடர வேண்டும். 

 சிம் கார்டு வாங்குவதற்கு வாடிக்கையாளர் அளித்த அடையாளம் மற்றும் முகவரி நகல் சான்று ஆவணங்களை அசல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரி பார்த்து, சில்லறை விற்பனையாளர் கையெழுத்திட வேண்டும். 

 சிம் கார்டு இணைப்புக்குரிய சேவையை வழங்குவதற்கு முன்பாக செல்போன் சேவை நிறுவனம், பெறப்பட்ட விண்ணப்பத்தில் தரப்பட்டுள்ள தகவல்கள் சரியானவை என்று சான்றளிக்க வேண்டும். 

 ஒருவருக்கு தெரியாமல் அவரது அடையாளம், இருப்பிட சான்றுகளை வழங்கி மற்றொருவர் செல்போன் சிம் கார்டு வாங்கினால், அப்படி செல்போன் சிம்கார்டினை விற்பனை செய்த சில்லறை விற்பனையாளர் மீது செல்போன் சேவை நிறுவனம் வழக்கு தொடர வேண்டும். 

 தவறு செய்கிற சில்லறை விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் மீது செல்போன் சேவை நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கத்தவறினால், செல்போன் சேவை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன

9 நவ., 2012

நாற்றான் கிணற்று தெருவில்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, நவம்பர் 09, 2012 No comments

நாற்றான் கிணற்று தெருவில் மர்ஹீம் நூர் முஹம்மது மரைக்காயர் அவர்களின் மருமகளாரும் மர்ஹீம் குலாம் கவுஸ் அவர்களின் சகோதரியும் மர்ஹீம் அப்துல் ரஹிம் அவர்களின் மனைவியும் ஜாப்பர் அலி அவர்களின் சிறிய தாயாருமாகிய உம்முல்ஹீதாஅவர்கள் மர்ஹீமாகிவிட்டார்கள் இன்ஷா அல்லா இன்று மாலை 7 மணிக்கு நல்லடக்கம் மீராபள்ளியில்.இன்னா இல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

8 நவ., 2012

வாத்தியாப்பள்ளி தெருவில்...

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், நவம்பர் 08, 2012 1 comment


வாத்தியாப்பள்ளி தெருவில் மர்ஹும் ம.கு.ஜெய்னுல்லாபுதீன் மரைக்காயர்  - S.அமீர் அலி இவர்களின் பேரனும், மர்ஹும் ஹாஜி Z.ஹாமீது மரைக்காயர் அவர்களின் தம்பி மகனும், Z.கலீமுல்லாஹ் அவர்களின் மூத்த மகனும், K.சல்மான் ஃபரீஷ் அவர்களின் சகோதரருமான K.சைபுல்லாஹ் அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை (வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

7 நவ., 2012

இறப்புச்செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், நவம்பர் 07, 2012 No comments

கலிமாநகர் மர்ஹீம் சுல்தான் மரைக்காயர் அவர்களின் மகளாரும், மர்ஹீம் அபதுல் மஸ்தான் மரைக்காயர் அவர்களின் மருமகளும் அப்துல் காலீத் அவர்களின் மனைவியும்  அப்துல் சமது அவர்களின் தாயாருமாகிய  ஆசியா பீவி அவர்கள் மர்ஹீமாகிவிட்டார்கள் இன்ஷா அல்லா இன்றுமாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராபள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்

3 நவ., 2012

கடலூர் மாவட்ட எஸ்.பி. மாற்றம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, நவம்பர் 03, 2012 No comments

கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யாக பணியாற்றி வந்த எஸ். பி. திரு ,பகலவன், தி.நகர் துணை கமிஷனராகவும்,மைலாப்பூர் துணை கமிஷனர் டி.கே.புகழேந்தி, அவர்கள் கடலூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கபட்டுள்ளார்கள்.

பசுமை நாயகன் கணேஷ்!

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, நவம்பர் 03, 2012 No comments



கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அரசு தரும் மானியத்தை விடவும், தொலைத்தொடர்பு துறைக்கு அரசு போடும் திட்டங்களை விடவும், விவசாயத் துறைக்கு மானியம் கிடைப்பது மிக மிகக் குறைவு. அப்படி அரசு அரிதாகப்போடும் திட்டங்களும், மானியங்கள
ும் விவசாயிகளுக்கு முழுமையாகப் போய்ச்சேருகிறதா என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அப்படித் தப்பித்தவறி அரசியல்வாதிகளின் கவனக்குறைவால் அவர்களின் பாக்கெட்டுக்குப் போகாமல் விவசாயிகளுக்குப் போகிறது என்றாலும் ஊரில் உள்ள அரசியல் செல்வாக்கு மற்றும் பணம் உள்ள விவசாயிகளுக்குத்தான் போய்ச்சேர்கிறது. இப்படி ஏழை விவசாயிகளுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் வேளையில், அந்த இடைவெளியைப் பாலம்போல செயல்பட்டு இணைத்துக்கொண்டிருக்கிறது புதுவையில் இயங்கிவரும் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை அபிவிருத்தி மையம் என்ற தனியார் அமைப்பு. ஏழை விவசாயிகளுக்குக் கடன் வாங்கித்தருவது, புதிய திட்டங்களை அவர்களிடம் அறிமுகப்படுத்துவது என முழுமையாக விவசாயிகளுக்கென இயங்கிக்கொண்டு வருகிறது இந்த மையம்.


ரசாயன உரங்களே போடாமல், இயற்கை உரங்களால் விளையும் கீரைகளைத் தன் தோட்டத்தில் விவசாயிகளிடம் அறிமுகம் செய்துகொண்டிருந்த இந்த மையத்தின் தலைவர் கணேஷைச் சந்தித்தேன்.

''வேளாண்மையில் பட்டபடிப்பை முடித்தபிறகு அரசு வேலைக்காகக் காத்திருந்தேன். அப்போ நிறைய கிராமங்களில் சுத்தித் திரிஞ்சப்ப, மண்புழு உரம், சொட்டு நீர்ப்பாசனம்னு நிறைய அரசு திட்டங்கள் ஏழை விவசாயிகளிடம் போய்ச் சேராமலே இருப்பது தெரிந்தது. என்னதான் நாம் நிறைய தொழில்நுட்பத்தைக் கண்டு பிடிச்சாலும் அதைப் பயன்படுத்துவது விவசாயிகள்தானே. நம்ம ஊர் விவசாயிகளுக்காக ஏதாவது பண்ணனும்னு தோணுச்சு. சரி... அரசு வேலை எல்லாம் வேணாம்னு இந்த மையத்தைத் தொடங்கிட்டேன்.

இந்த மையத்தோட முக்கிய பணிகள், அரசின் புதிய திட்டங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்துவதுதான். கடன் வேணும்னா நாங்களே கடன் வாங்கித்தர்றோம்; புதுசா அறிமுகப்படுத்துற பயிர்களை எப்படிப் பயிற்றுவிப்பதுனு பயிற்சி தருவது, விவசாயத்துக்குத் தேவையான எந்திரங்களைத் தருவது என்பதோடு விளைந்த தானியங்களை நாங்களே மார்கெட்டிங்கும் பண்ணித்தர்றோம். இது மட்டும் இல்லாம 20 பேர்கொண்ட விவசாயக் குழுக்களை உருவாக்கி மாதாமாதம் அவங்களே 200, 300 ரூபாய்னு போட்டு சேமிப்பாங்க. இப்படி ஐந்து மாதம் சேமித்த பணத்தைக் குழுவுல இருக்கிறவங்களுக்குக் கடன் தேவை பட்டுச்சுன்னா தருவாங்க. இதனால, கந்து வட்டிக்காரங்ககிட்ட கை ஏந்தவேண்டிய அவசியம் இல்லை பாருங்க.

புதுவை கடலோர கிராமத்தைச் சேர்ந்த 3,000 விவசாயிகள் எங்களிடம் உறுப்பினராக இருக்காங்க. நபார்டு வங்கி மூலமாக விவசாயிகளுக்கு ஏராளமான கடன்கள் கிடைக்குது. ஆனா, விவசாயிகளுக்கு யாரிடம் கடன் கேட்பது, என்ன சொல்வாங்களோனு பயம் இருக்கும் இப்போ யாருக்கும் எந்தப் பயமும் இல்லாம பேசுறாங்க. விவசாயிகளுக்காகவே ஒருங்கிணைந்த பண்ணையை உருவாக்கி இருக்கிறோம். இந்தப் பண்ணையில் மண்புழு உரம் தயாரிப்பு, காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, இயற்கை கீரைகள்னு நிறைய திட்டங்கள் இருக்கு. இங்கே வந்து விவசாயிகள் கற்றுக்கொண்டு அவங்க இடத்துல பயிர் செய்வாங்க. இதுக்கெல்லாம் அதிகச் செலவும் இருக்காது. நெல், கரும்பு போன்ற அதிகச் செலவு செய்யவேண்டிய பயிர்களை வளர்க்கமுடியாத ஏழை விவசாயிகள் இது போன்ற சுயத்தொழிலில் ஈடுபடலாம்.

வேளாண்மை படிச்சிட்டு வேலை இல்லாமல் இருக்கும் மாணவர்களுக்கு எங்கள் மையம் மூலமாக இரண்டு மாதம் வேளாண்மை தொழிற்பயிற்சி தர்றோம். இந்தப் பயிற்சிக்கு அப்புறம் மாணவர்கள் விவசாயிகளுக்கு உதவியாக இருப்பாங்க. மாணவர்களுக்கு ஊதியமும் கிடைக்கும். சுய தொழில் தொடங்குறவங்களும் தொடங்கலாம்'' என்று நம்பிக்கையோடு முடித்தார்.

இவர்போல மனிதர்கள் ஊருக்கு ஒருவர் இருந்துவிட்டால் இந்தியாவே பசுமைக்காடாக மாறி விடும்!
நன்றி;http://en.vikatan.com/
- ஆ.நந்தகுமார்

ஆசிரியர் தகுதி மறுதேர்வு: 3% பேர் மட்டுமே தேர்ச்சி!

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, நவம்பர் 03, 2012 No comments

ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதிய 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேரில் 19,246 பேர் மட்டுமே,அதாவது 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்டன.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் 6-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

முதல் தாளை எழுதிய
 2 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேரில் 10,397 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாளை எழுதிய 3 லட்சத்து 77 ஆயிரத்து 973 பேரில் 8,849 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதல் தாளில் 3.7 சதவீதம் பேரும், இரண்டாம் தாளில் 2.3 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில் ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

தமிழகம் முழுவதும் சுமார் 7,500 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதால்,முதல் தாளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைப்பது கடினம்.தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் 20,525 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் உரிய தகுதிகளுடன் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் பணி கிடைக்க வாய்ப்புள்ளது.

ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.7 லட்சம் பேர் எழுதினர். இதில் 2,448 பேர் மட்டுமே (0.36%) தேர்ச்சி பெற்றிருந்தனர். இதையடுத்து 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காகவும், தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14-ம் தேதி நடத்தப்பட்டது.

மறுதேர்வில் தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முறை சுமார் 17 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 2,246 பேர் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் முதலில் பணி நியமனம் வழங்கப்படும்.

அதன் பிறகே ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

நவம்பர் 6-ல் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றிபெற்ற 19,246 பேருக்கும் நவம்பர் 6-ம் தேதி முதல் அந்தந்த மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

ஒவ்வொரு தேர்வருக்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.அதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம்,இடம் உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்பட்டிருக்கும்.அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்படாது.

ஒவ்வொரு தேர்வரும் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாகப் படித்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கான படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அனைத்து அசல் சான்றிதழ்களையும்,அவற்றின் இரண்டு நகல்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கொண்டுவர வேண்டும்.

முதல் தாளில் வெற்றிபெற்ற தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும்போது, அசல் சான்றிதழ்களுடன் புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு பதிவு சான்றிதழ் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரால் சான்றொப்பமிடப்பட்ட பதிவு சான்றிதழின் இரு நகல்கள் ஆகியவற்றை உடன் கொண்டுவர வேண்டும்.

இது தொடர்பாக, வேலைவாய்ப்பு இயக்குநரகம் உரிய உத்தரவுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு வழங்கியுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் அடுத்த தேர்வு

அடுத்ததாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனம் உள்ளிட்டப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ள உள்ளது.

அதன்பிறகு,ஆசிரியர் தேர்வு வாரியத்தை புதுப்பித்து ஆன்-லைன் வழி விண்ணப்பம் உள்ளிட்ட அம்சங்கள் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே, வரும் ஜூன் மாதத்தில்தான் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மீண்டும் தவறுகள்

ஆசிரியர் தகுதி மறுதேர்விலும் விடைத்தாளில் தேர்வர்கள் பல்வேறு தவறுகளைச் செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

நன்றி;http://news.vikatan.com/

1 நவ., 2012

தமாம் அருகே மின்சாரம் தாக்கி இறப்பு 27

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், நவம்பர் 01, 2012 No comments


சவுதி அரேபியா கிழக்கு மாகணத்தில் அல்ஹஸா – தம்மாம் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள  அப்கைக் அருகில் உள்ள அயின்தார்  கிராமத்தில் செவ்வாய்கிழமை அன்று மாலை திருமண நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்ததுஇந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்அப்போதுஎதிர்பாராதவிதமாக மண்டபத்திற்குள் சென்ற உயர் அழுத்த மின்சார வயர் கிழே விழுந்து தீப்பொறி ஏற்பட்டது.


அந்த மின்சார வயர் திருமண மண்டபத்தின் வாயிலில் உள்ள ஒரு இரும்பு கதவின் மீது விழுந்துள்ளதுஅருகில் நின்றவர்கள் அந்த கதவைத் தொட்டதும் பட்டாசுவெடித்தது போன்று படபடவென சத்தம் எழுந்ததுஇதில் கதவு வழியாக மின்சாரம் பாய்ந்ததால் பலர் இறந்தது தெரியவந்துள்ளது.

இதில் 5 குழந்தைகள் உள்பட27 பேர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்துள்ளனர்படுகாயமடைந்த 37-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு தீவிரசிகிச்சை அளிக்கப்படுகிறதுஇறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று தெரிய வருகிறது.

புகைப்படம்mypno

31 அக்., 2012

இன்று மாலை கரையை கடக்கும் ...

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், அக்டோபர் 31, 2012 No comments






 வங்க கடலில் உருவாகியுள்ள நீலம் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் இன்று  மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேதாரண்யம் தொடங்கி திருவள்ளூர் வரை கடலோர மாவட்டங்களில் திங்கள் இரவிலிருந்து கன மழை பெயந்து வருகிறது. கிணறு, ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள வயல்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புயல் மற்றும் கன மழையை எதிர்கொள்ளும் வகையில் கடலோர மாவட்டங்களில் மீட்பு பணிக்கு தயார் நிலையில்  அரசுஊழியர்கள் உள்ளனர். நமதூர் பரங்கிப்பேட்டையில் பேரூராட்சி சார்பில் முன்னேற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக பேரூராட்சி மனற தலைவர் M.S.முஹமமது யூனுஸ் தெரிவித்தார், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் சார்பாகவும் ஸாதிமஹால் மற்றும் மினி மஹால் ஆகியவை தயார் நில்லையில் வைக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்பு எற்படாமல் இருக்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக




30 அக்., 2012

விடாத மழை...பரங்கிப்பேட்டையில்

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், அக்டோபர் 30, 2012 No comments



சென்னைக்கு தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயல் சின்னமாக மாறும் என்றும், இதனால் கன மழை பெய்யும் என்பதாலும்,சென்னையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடலூர் உட்பட பல மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து சென்றதால் நாகப்பட்டினம்,திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.


இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையானது, நேற்று அதிகாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பரங்கிப்பேட்டையில் நேற்று இரவில்லிருந்து விடாமல் மழைபெய்துவருகிறது தெருக்கள்தோரும் மழைநீர் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது











.

27 அக்., 2012

வாழ்த்துகிறோம்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, அக்டோபர் 27, 2012 No comments

பரங்கிப்பேட்டை முஸ்லிம் பொதுமக்கள் அனைவர்களுக்கும் தனது பெருநாள்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது   http://portonovonews.blogspot.in








Funny photo effects

26 அக்., 2012

பாரதிய ஜனதாவின் ஊழல் சந்தி சிரிக்கிறது!

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, அக்டோபர் 26, 2012 No comments

 பாஜக தேசிய தலைவர் நிதின் கட்கரி நடத்தி வரும் தொழில்கள் தொடர்பாக பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. 

புதிய குற்றச்சாட்டுகள்: 1999ஆம் ஆண்டில் கட்கரி மகாராஷ்டிர மாநில அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி தனியார் நிறுவனங்களுக்குச் சாலை அமைப்பதற்கான அனுமதியை அளித்தார். அதில் ரூ. 165 கோடிக்கு அவர் ஆதாயம் பெற்றார் என்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. 

மேலும், இந்த ஊழல் பணத்தை கொண்டு தனது கார் டிரைவர் உள்பட பல்வேறு பினாமிகளின் பெயர்களில் 18 தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இது தவிர தனது நிறுவனத்துக்காக விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளார் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அரவிந்த் கேஜரிவால் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

சிந்திக்கவும்: இந்நிலையில் கட்கரிக்கு கட்சியின் மானம் கெட்ட மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கட்கரி மீதான குற்றச்சாட்டுகள் பாஜகவின் உள்கட்சி விவகாரம் என்று கழுவிற மீனில் நழுவுற மீனா ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது. 
பின் குறிப்பு: கர்நாடக பாரதிய ஜனதாவின் முன்னாள் முதல்வர் இடையூரப்பா நில மோசடி முதல் பல்வேறு ஊழல்களை புரிந்தார். இப்பொழுது தனிக்கட்சி ஆரம்பிக்க போகிறார். இதுதான் இந்த கொள்கை கோமான்களின் யோக்கிதை.

நன்றி;http://www.sinthikkavum.net

23 அக்., 2012

பரங்கிப்பேட்டை மழைக்கால புகைப்படங்கள் -2

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், அக்டோபர் 23, 2012 No comments








 இன்று காலை வெயில்  உதித்தநிலையில் திடீரென மழை பெய்ந்தது  ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்துஓடியது சின்னதெருவில் மழைநீர் வடிய வழி இல்லாநிலையில் தண்ணீர் தேங்கி சிறிய குட்டைபோல் காட்சியளித்தது குறிபிடதக்கது.